வியாழன், 10 ஜனவரி, 2019

திருவெறும்பூரில் திராவிடர் தொழிலாளர் கழக பேரவைக் கூட்டம்

திருச்சி, ஜன.9 மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை கலந்துரை யாடல் கூட்டம் திருச்சி, திருவெறும் பூரிலுள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று (ஜன.6) மதியம் 3 மணியளவில் நடை பெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு  எல்.சி.எஸ் தலைவர் சண்முகம்வரவேற் புரை யாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் , மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன்,   நகர தலைவ சுரேஷ், நகர செயலாளர் இளங்கோவன், பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம், தி.தொ.க. செயலாளர் ஆ.அசோக் குமார்  ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் உரை யாற்றும் போது, நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்பேரவை இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை மாநில தலைவர் அ.மோகன், மாநில விவசாய அணி செயலாளர் ராயபுரம் கோபால்  உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றினார்கள். மேலும் இக்கலந்துரையாடல் கூட் டத்தில், தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் திருச்சி தி.மகாலிங்கம் மறைவிற்கு இக்கலந் துரையாடல் கூட்டம் வீர வணக்கத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு அனைத்து போக்கு வரத்து கழகங்களிலும் திருவள்ளுவர் படத்துடன் கூடிய திருக்குறள் எழுதப் பட்டுள்ள பலகையை மீண்டும் வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவை புதிய பொறுப்பாளர்கள்
திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் தலைவர் ச.அங்கப்பன், துணைத் தலைவர் எஸ்.பங்கிராஜ், பொதுச் செயலாளர் மு.செல்வம், துணை பொதுச் செயலாளர் தங்கவேல், பொருளாளர் டி.ராஜேந்திரன், துணை செயலாளர்கள் எஸ்.ஜோசப் ஜேம்ஸ்ராஜ், பி.தங்கம்,
மதுரை மண்டலம்
தலைவர் சின்னதம்பி, துணைத் தலைவர் மு.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் ச.மகேஷ், துணைப் பொதுச் செயலாளர் பா.முத்துக்கருப்பன், பொருளாளர் கு.ராமசாமி.
குடந்தை மண்டலம்
தலைவர் கு.கவுதமன், துணைத் தலைவர் இரா.ரவிச்சந்தின், பொதுச் செயலாளர் க.குருசாமி, துணை பொதுச் செயலாளர் தன.சஞ்சீவி, பொருளாளர் மா.வீரமணி, துணை செயலாளர் சுப்ரமணியன்.
பேரவை செயலாளர்கள்
சிவா (எ) சிவகுருநாதன் (மதுரை), குருசாமி (கும்பகோணம்) ஆகியோர் பேரவை பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.
கலந்து கொண்டோர்
பெல்.ம.ஆறுமுகம், மாநகர தலைவர் மருதை, கல்பாக்கம் ராமச்சந்திரன், விடுதலை கிருஷ்ணன், காட்டூர் சங்கிலி முத்து,காமராஜ், ராஜேந்திரன், ஆண்டிராஜ், எல்.சி.எஸ், சிங்கராஜ், நாதன், பன்னீர் செல்வம், துரையப்பன், தாமஸ், திரு வரங்கம் நகர செயலாளர் முருகன், மாநகர அமைப்பாளர் கனகராஜ், தங்க வேல், ஆட்டோ செல்வம்,திருஞானம், சேவியர், ரங்கராஜ், சந்துரு, குடந்தை ராணி குருசாமி, அற்புதம், கவிதா, இளஞ்செழியன், ஆரோக்கியதாசு உள்ளிட்ட தொழிற்சங்க பொறுப்பாளர்களும், கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தோழர்களுக்கு வேண்டுகோள்
இதற்கு முன்பு பல்வேறு மாவட்டங் களில் செயல்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்களின் புதிய தொலைபேசி எண்களை எங்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்டக் கழக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் அவற்றை செயல்பட வைக்கத் திட்டமிட்டுள்ளது.


திண்டுக்கல் மோகன் (பேரவைத் தலைவர்) - 9965092546, திருச்சி மு.சேகர் (தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர்) 9865618754, 9698179749
- விடுதலை நாளேடு, 9.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக