சனி, 5 ஜனவரி, 2019

மதுரை மண்டல திராவிடர் தொழிலாளர் சங்க கலந்துரையாடல்

மதுரை, ஜன.2 26.12.2018 அன்று மதுரை முருகானந்தம் பழக்கடையில் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பில் அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டல திராவிடர் தொழிலாளர் சங்க கலந்துரை யாடல் கூட்டம் மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற்றது.

தொழிலாளர் கழகபேரவை யின் துணைப் பொதுச் செயலாளர் மு.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் செல்வம், மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முனியசாமி, செயலாளர் அ. முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகுருநாதன் அனைவ ரையும் வரவேற்றார். பேரவை மாநிலத் தலைவர் அ.மோகன் கூட்டத்தின் நோக்கங்களை விளக் கிப் பேசினார். பேரவை மாநில பொதுச் செயலாளர் மு.சேகர் நிறைவாக சிறப்புரையாற்றினார்

கூட்டத்தில் திராவிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கழகத் தோழர்கள் சிதம்பரம், இராமசாமி, முத்துக்கருப்பன், ஆட்டோ செல்வம், சவரிமுத்து, போட்டோ இராதா, ஒட்டுநர் முரளி மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: திராவிடர் தொழி லாளர் சங்க மதுரை மண்டல தோழர்கள் அனைவரும் விடு தலை சந்தா செலுத்தி விடுதலை நாளிதழ் வாங்கி படிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 2: தமிழர் தலை வரின் அறிவுறுத்தலின்படி தமிழ் நாடு அரசு பேருந்துகளின் உள் பகுதியில் திருவள்ளுவர் படத் துடன் கூடிய திருக்குறள் வைக்க வேண்டுமென போக்குவரத்து கழகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3: போக்குவரத்து துறையில் பணி புரியும் தொழி லாளர்களுக்கு சேர வேண்டிய பஞ்சப்படி  நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டுமென இக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் களுக்கு கொடுக்கவேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: 240 நாட்கள் பணி செய்த தற்காலிக தொழிலா ளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென இக்கூட் டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6: மதுரை மாநகரில் புதிதாக தந்தை பெரியார் ஆட்டோ சங்கம் துவங்கப்பட்டு அதன் மாவட்ட அமைப்பாளராக ஆட்டோ செல்வம் அவர்களை இக்கூட்டம் முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறது.

-  விடுதலை நாளேடு, 2.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக