அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (290)
நாகையில் பெரியார் சிலைத் திறப்பு
கி.வீரமணி
கட்டுரையின் ஒரு பகுதி.....
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு திருவெறும்பூரில் 29.8.1998 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணியும் நடந்தது. தொழிலாளர் கழகப் பேரவைப் பொதுச் செயலாளர் சோ.தங்கராசு தலைமை வகித்தார். மாநாட்டு மேடைக்கு பகுத்தறிவாளர் சி.வீராசாமி பெயர் சூட்டப்பட்டது.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பில் எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள் வழங்கும் விழா மாநாட்டு மேடையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு சிறக்க ஒத்துழைத்த தோழர்களுக்கு ஆடை போர்த்தி, கழகத்தின் சார்பில் சிறப்புச் செய்தேன். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருவெறும்பூர் மாநாட்டுக்கு பல்வேறு பகுதியிலிருந்து தொழிலாளர்கள் அணிவகுப்பாக வந்து கலந்துகொண்டனர்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய பின், மறைந்த மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.வீராசாமி அவர்களின் நினைவுக் கல்வெட்டினை எழில் நகர் பகுதியில் திறந்து வைத்து, உரையாற்றினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக